Tuesday, August 23, 2011

சில பல வருடங்களுக்கு பின்பு



12 வது சமச்சீர் கல்வியாண்டு, 12ம் வகுப்பு முதல் நாள்:

ஆசிரியர்: மாணவர்களே, இதுவரை நீங்கள் படித்தது எல்லாம் சுலபம். இந்த வருடம் மிக கடினமாக இருக்கும். மிகவும் கவனமாக படிக்கவும். இது தான் உங்கள் கல்லூரி வாழ்க்கையை முடிவு செய்ய போகிறது. இப்போது பாடத்தை துவக்குவோம்.
உரக்க சொல்கிறார்
"ஒள"
- பார்த்தீர்களா? ஒன்றாம் வகுப்பில் இருந்து 11 வகுப்பு வரை, ஒற்றை எழுத்தை தான் எழுதி படித்தீர்கள் - அ, ஆ, இ, ஈ ...ஒ, ஓ என்று. முதல் முறையாக இரு எழுத்துக்கள் இணைந்து ஒரு எழுத்தாக வருகிறது. இதற்கு பின் வரும் ஆய்த எழுத்தை நீங்கள் சமசீர் கல்லூரியில் படிக்கலாம்....
----------------------------------
15 வருடங்களுக்கு பின்பு....
தொடர் மழை காரணமாக காஷ்மீரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பேங்கலூரூ சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக முடியவில்லை என்று, செல்வி  வக்கீல் தெரிவித்தார்.
---------------------------------
20 வருடங்களுக்கு பின்பு....
எனக்கும் கலிங்சர் டிவி சாட்டிலைட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் விண்வெளி துறை சம்பத்தப்பட்டவளும் இல்லை. சாட்டிலைட் எப்படி வேலை செய்கிறது என்று எனக்கு தெரியாது. நான் பட்டன் மட்டும் தான் அமுக்கினேன், அது விர்'ரென்று சென்றது என பனிமொழி கமம்சங் விழாவில் தெரிவித்தார். அவர் மீது சிபி'ஈ' 30G வழக்கில் ஆஜராகும்படி அழைப்பு விடுத்துள்ளது
----------------------------------
25 வருடங்களுக்கு பின்பு
என் தாத்தா விட்டு சென்றது எனக்கான ஊக்கத்தை, ஆக்கத்தை, தாக்கத்தை, தூக்கத்தை.. நான் பின் வாங்க மாட்டேன்.. மூன்று வேலைக்கு மேலே தின்ன மாட்டேன்.. ஜன் (கா பேட்டா) லோக்பால் வரும் வரை தூங்க மாட்டேன்... என்று அன்னபா பசாரேவின் பேரன் சூடான பேட்டி அளித்தார். மேலும் அவர் தனது "அடுத்த " சாகும்வரை உண்ணாவிரத தேதியை அடுத்த மாதம் அறிவிப்பதாக தெரிவித்தார்.

--------------------------------
எத்தனையோ வருடங்களுக்கு பின்பு....
எனக்கு பிறகு யார் தலைவர் என்பதை பொதுக்குழு/செயற்குழு முடிவு செய்யும் என்று கலிங்சர்  தெரிவித்தார். அதை டாச்லின் மற்றும் பழகிரு ஆமோதித்தனர்.





Monday, August 22, 2011

லஞ்சம் ஒழிக - 1


ஜன் லோக்பால் ஊழலை விசாரிக்க போகிறது. ஏன் அதை தடுக்க நாம் முயற்சிக்க கூடது?

ஊழல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது? - நம் அவசரத்தில்.

நிதானமாக யோசிப்போம்.
1) அரசு துறையில் நமக்கு ஒரு காரியம் நடக்கணும். ஒழுக்கமாய் தேவையான ஆவணங்களை கொடுத்தாயிற்று. ஆனால் பிரச்சினையே அது எப்போது நடக்கும்/முடிக்கப்படும் என்று நமக்கு தெரியாது. இங்கு தான் நம் குறுக்கு புத்தி / லஞ்ச புத்தி தலை தூக்கி பார்க்கிறது. இதைத் தான் அரசு அதிகாரிகளும் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள். நம் தலையை கொய்கிறார்கள்.

என்ன செய்யலாம்?
ஒவ்வொரு வேலைக்கும் இத்தனை நாட்கள் ஆகும் என்று வரைமுறை செய்ய வேண்டும். கால தாமதம் ஆகும் என்றால் முறையான காரணம் தர வேண்டும் என நிர்பந்திக்கலாம். தட்கல் முறையையும் வைத்து அவசர தேவைகளுக்கு முறையான கட்டணத்துடன் சேவை அளிக்கலாம். இது லஞ்ச வேரை மேலும் வளர விடாமல் தடுக்கும்.

சொல்லுவது சுலபமாக இருந்தாலும், இதை செயல் படுத்த சில காலம் ஆகலாம். அரசு துறை வேலைகளை முறைப் படுத்த வேண்டும். தேவையான ஆட்களை நியமித்து பயிற்றுவிக்க வேண்டும். அனைவரையும் கண்காணிக்கும் அமைப்பையும் கொண்டு வர வேண்டும். மக்களிடம் அவர்களின் எதிர்பார்ப்பை பதிவு செய்து, தேவையான, முன்னேற்றத்துக்கு அவசியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

யார் செய்ய வேண்டும்?
முதலில் மாவட்ட ஆட்சியாளரிடம் இருந்து தொடங்கலாம். நிறைய படித்த, ஊக்கம் நிறைந்த, வேகமும், விவேகமும் கொண்ட இந்த இளம் தலைமுறை (மாவட்ட) ஆட்சியாளர்கள் இந்த மாற்றத்தை தொடங்கலாம்.

யார் உதவுவது?
எந்த புது முயற்சிக்கும் அரசு பணம் தரப்போவது இல்லை. எனவே ஆரம்பகட்ட வேலைகளில் தன்னார்வ குழுக்களின் உதவியை ஏற்றுக்கொள்ளலாம். கல்லூரி மாணவர்கள் பகுதி நேரம் இதில் செலவிடலாம். ஒரு தெளிவான நிலைக்கு வந்ததும், அரசிடம் சமர்பித்து அதற்கான நிதியை கேட்கலாம். நிச்சயமாக ஒரு மாவட்ட ஆட்சியாளரால் இந்த மாற்றங்களை ஆரம்பிக்க முடியும்.

2) போக்குவரத்து விதிமீறல்கள்
நம்மில் எத்தனையோ பேர் எத்தனையோ முறை பல தவறுகள் செய்து சாலை காவலர்களிடம் மாட்டி இருக்கிறோம். உடனடி நிவாரணம் - கையூட்டு எனப்படும் லஞ்சம். நாமும் தருவோம், அவர்களும் வாங்குவார்கள். யாருக்கும் வெட்கம் இல்லை.

என்ன செய்யலாம்?

Friday, August 19, 2011

அண்ணா ஹாஜாரே

அண்ணா ஹாஜாரே க்கு என் ஆதரவினை பதிவு செய்கிறேன்.
அவர் நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஆனால் அவர் நோக்கம் சரியாக இருப்பதால் தான் ஆதரவு. நல்லது நடக்கட்டும். 

Friday, March 09, 2007

வெங்காயம் பேசுகிறேன்

சரியாக
நிகழ்ந்து விட்டதென்
இறப்பு!

வேட்டி அவிழ்கும்
அல்லகைகளையும்,
பீ மிதித்த செருப்புகளை
மாலையாக்கும் மடையரையும்,
சாணிக்கும் சந்தனத்திற்கும்
வித்தியாசம் தெரியாதவரையும்

பார்க்காமல்,

பகுத்தறிவின்
தொடைகளுக்கிடையில்
வழிந்திறங்கும் கெட்ட
கழிவுகளாக

பண புழுக்கமிகுந்த
அறையில்
ஆறுவகை உணவுகள்
ஆல்கஹால் பானங்கள்
வாயில் ஒழுக

அறிவற்றுலரும்
கூட்டத்தின் தலைவனாக இல்லாமல்
சரியாக
நிகழ்ந்து விட்டதென்
இறப்பு!!

(இன்ஸ்பிரேஷன் : திரு. கவிமதி)

Wednesday, February 07, 2007

எல்லோரும் ஒருநாள் டோண்டுதான்

முக்கிய முன் குறிப்பு : டோண்டு சார் செய்தது/செய்வது சரியா தவறா என்பதை பற்றி அல்ல இந்த பதிவு.

ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. யாரையாவது வலைபதிவில் இருந்து தூக்க வேண்டுமென்றால்..

1. அவரை பத்தியும் அவர் குடும்பத்தை பத்தியும் தரகுறைவாக எழுத வேண்டும். தமிழில் உள்ள பெரும்பாலும் புழக்கத்தில் இல்லாத உடல் உறுப்புகளை கொச்சையாக குறிக்க கூடிய வார்த்தைகளையிட்டு ஈ-கடிதம் அனுப்ப வேண்டும்.

2. அவர் பதிவில் பின்னூட்டம் போடுறவங்களுக்கும் அதே கதி வரணும். பிறகு கொஞ்ச நாளில் சம்மந்தப்பட்ட வலை பதிவர் எழுதுவதை நிறுத்தி விடுவார். அப்புறம் "வெற்றி" "வெறி ஒழிந்தது"ன்னு கோஷம் போட வேண்டியது.

டோண்டுவை மறந்து இந்த சூழ்நிலையை கவனிக்க வேண்டும். நீங்கள் ஒரு கருத்து சொல்கிறீர்கள். எனக்கு அது பிடிக்கவில்லை, எதிர்க்கிறேன். நீங்கள் கேட்பதாய் இல்லை. மீண்டும் மீண்டும் அதை பற்றியே பேசுகிறீர்கள். நான் உடனே ஒரு அவதாரம் எடுத்து உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பற்றி நாரசாரமாய், ஆபாசமாய் எழுதுகிறேன். உங்கள் பதிவில் பின்னூட்டம் இடுபவரையும் அப்படியே செய்கிறேன். என்ன நடக்கும்? இப்போது டோண்டுவுக்கு நடந்ததே தான் நாளை உங்களுக்கும்.

வலை பதிவில் இதை தான் எழுதணும், எழுத கூடாதுன்னு சட்டம் இல்லை. கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். ஒருத்தர் கருத்து பிடிக்கலியா அவர் பதிவுக்கு போவதை தவிர்க்கலாம். டோண்டு எழுதியது பிடிக்கவில்லையா அவர் பதிவு பக்கமே போய் இருந்திருக்க தேவை இல்லை. பிடிக்காதவருக்கு ஆதரவே தந்து இருக்க கூடாது.

ஒருவகையில் அவர் பக்கம் நியாயமாகப் படுகிறது. இருப்பினும் நியாயம் அநியாயம் பற்றி பேச எனக்கு அருகதை இல்லாததால்(நானும் முகமிலி தானே, அதனால்) அதை பற்றி எதுவும் இங்கே பேசவில்லை.

போலியின் எழுத்து நடையும், டோண்டுவின் எழுத்து நடையும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. அதனால் போலியும், டோண்டுவும் ஒன்று என்கிற வாதம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அலசி பார்த்ததில், மர்ம தொடர் தலைப்பு பதிவரின் நடையும், போலியின் நடையும் ஒத்துப் போகிறது. என் கணிப்பு தவறாகவும் இருக்கலாம்.

பின் குறிப்பு 1 : ஒரே நாளில் டோண்டுவை தவிர மற்ற எல்லாரும் நல்லவர் ஆகி விட்டார்கள். அதைத்தான் என்னால் நம்ப முடியவில்லை.

பின் குறிப்பு 2: நான் டோண்டுவிற்க்கு என் அசல் முகத்துடன் பின்னூட்டமிட்டு, போலியிடம் வாங்கிக்கட்டிக் கொண்டவன். :-)

பின் குறிப்பு 3 : தலைப்பு ஒரு கவர்ச்சிக்கு தான் ;-)

Sunday, September 10, 2006

பகுத்தறிவு என்றால் என்ன?

பகுத்தறிவு என்றால் என்ன?
என்ன ஏது என்று புரியாவிட்டால், அதை எதிர்த்து போராடுவது
அழுக்கு தெரியாமல் இருக்க கறுப்பு சட்டை அணிவது
தெரு முனைகளில் கூட்டம் போட்டு அசிங்கமாக பேசுவது
பிடிக்காதவர்களை நடுதெருவில் வைத்து செருப்பு விளக்கமாறு காட்டுவது
கடவுள் இல்லை என்று சாமி சிலைக்கு செருப்பு மாலை போடுவது
அதே சாமி சிலைக்கு பூஜை செய்ய உரிமை கேட்பது
பறவைகளின் கக்கூஸை பகுத்தறிவு சிலை என்பது
வருடம் ஒருமுறை அந்த கக்கூஸுக்கு மாலை போடுவது
அந்த கக்கூஸை வணங்குவது
இவர்கள் மட்டுமே அதை கழுவ உரிமை வேண்டுவது
பூணூல் போட்டவர்களை திட்டி தீர்ப்பது
சண்டைக்கு வராதவர்களிடம் வெட்டி வீரத்தை காட்டுவது
குல்லா போட்டவர்களுக்கு சலாம் போடுவது
வசை வார்த்தைகளை கொண்டு புத்தகம் எழுதுவது
கோவணத்தில் கடவுள் இருக்கிறாரா என்று தேடுவது
ஈழத்தை பற்றி இந்தியாவில் பேசுவது
கறுப்பு வெள்ளையில் போஸ்டர் அடிப்பது
கோயில் கருவறைக்குள் நுழைந்துவிட்டு வெற்றி என்பது
அடிக்கடி தீக்குளித்து உயிருடன் இருப்பது
நிற்க்கும் ரயிலின் முன் பாய்ந்து வீரம் காட்டுவது
தமிழ்நாட்டு கற்பை காப்பாற்றுவது
கற்பை காப்பாற்ற வேட்டியை தூக்குவது
தூக்கிய வேட்டியுடன் போய் சினிமா நடிகையை மிரட்டுவது
பகுத்தறிவுள்ள மெகா சீரியலுக்கு விளக்கு பிடிப்பது
கற்பை போற்றி பாதுகாக்கும் டிவிக்கு குடை பிடிப்பது
ரோடு போடும் தாரை சுவற்றில் அடிப்பது
இவர்களின் பேச்சை கேட்பவர்களையும் வெங்காயமென்பது
மொத்தத்தில் பெரியாரின் பேரை கெடுத்து அவர் மீதான் மதிப்பை உடைத்து குட்டிசுவராக்குவது - பகுத்தறிவு

சாமி இல்லைன்னு சொல்லுறியா. சரி இல்லைன்னு வச்சிக்கோ. எதுக்கு செருப்பு மாலை போட்டு உன் கீழ்தர புத்தியை காட்டுற. மனசு எப்படியோ அது தான் வெளியவும் வரும். காசு மாலை போடுறவன் பணக்காரன். பூமாலை போடுறவன் மரியாதையானவன். செருப்பு மாலை போடுறவன் செருப்புக்கு சமானம் தான்.

வேதம் புராணம் எல்லாம் பொய். எல்லாம் கதை. இருந்துட்டு போகுது. நீ படிக்காதே. உனக்கு புரியாட்டி அதை போட்டு ஏன் எரிக்கிறே? அடுத்தவனுக்கு புரியுதேன்னு உனக்கு ஏன் வயிறு எரியுது? வேதம் படிச்சவன் அவன் வேலையை பார்த்துட்டி போனா, நீ ஏன் அவன் பின்னாடி வேட்டியை தூக்கிட்டு போற? உனக்கு வேலை இல்லையா?

பார்ப்பான் சண்டைக்கு வர மாட்டான்னு நல்லா தெரிஞ்சி அவங்களை மட்டும் எதிர்க்கிறது. கவுண்டர், தேவர் கிட்ட போய் இப்படி பேசிப்பாரு.. வகுந்துடுவாங்க. முஸ்லீம் பத்தி பேசிப்பாரு. நடக்குறது தெரியும்.

சிலையை கழுவி சந்தனம் பூசினா தப்பா?. தப்பு தான். பகுத்தறிவோட செருப்பு மாலை போட்டு சாணியை பூசி இருந்தா மனுஷ குணம்னு சொல்லி இருப்பாங்க. பாவம் மரியாதை செய்ய தெரியாம சந்தனம் பூசிட்டாங்க.

சினிமாகாரி வாயிலதான் தமிழ் பெண்கள் கற்பு இருக்கா? யாரோ ஏதோ சொல்லிட்டாங்களாம், இவங்க போய்ட்டாங்க வேட்டியை தூக்கிகிட்டு. நல்ல பொழப்புடா உங்களோடது.

உங்களை மாதிரி சீடரை எல்லாம் திருத்த பெரியார் திரும்பி பொறக்கணும். அதுக்கு நான் கடவுளை கும்பிட்டுக்குறேன்.

Saturday, September 09, 2006

ஒரு காட்டுல ஒரு நரி

ஒரு காட்டுல ஒரு நரி இருந்திச்சாம்.

அந்த காட்டுல இருந்த மத்த மிருகம் எல்லாம் இதை மதிக்காம புறக்கணிச்சி, திட்டி அடிச்சி கொடுமை பண்ணிச்சாம். பொறுத்து பொறுத்து பார்த்த நரி ஒரு நாள் வெறி பிடிச்சி கடவுளை நோக்கி தவம் பண்ணிச்சாம். கடவுளும் நரி முன்னாடி தோன்றி என்ன வரம் வேணும்னு கேட்டுச்சாம். நரி சொல்லிச்சாம்,

நான் ரொம்ப சின்னவனா இருக்கேன், யாரையும் என்னால பணிய வைக்க முடியல, பலம் குடு, ஆயுதம் குடு, எல்லாரையும் எதிர்க்க துணிவு குடுன்னு.

சாமி சொல்லிச்சாம்
நான் இந்த வரம் தர்றேன். ஆனா ஒண்ணு, உன் பலத்தோட இருக்கிறவன் கிட்ட மோதணும், உன்னைவிட பலம் குறைஞ்சவன்கிட்ட மோதுனா உன் பலம் குறைஞ்சி கிட்ட வரும், கடைசியில நீ இப்ப இருக்குற மாதிரி ஆயிடுவேன்னு சொன்னாராம்.

நரியும் சரின்னு சொல்லிட்டு வரத்தை வாங்கிட்டு சாமிகிட்ட நன்றி சொல்லிட்டு ஒரு கண்ணாடி முன்னாடி நின்னு பார்த்துச்சாம். அங்கே நரி தெரியலியாம், சர்வ வல்லமை படைத்த புலி மாதிரி தெரிஞ்ச்சிசாம். காட்டுல பகட்டா திமிரோட திரிஞ்ச பல மிருகத்துக்கு இந்த நரி-புலியை பார்த்து பயம் வந்து மரியாதை குடுக்க ஆரம்பிச்சதாம். பக்கத்து காட்டுல இருந்த பல நரிகளும் இந்த புலிக்கு பாராட்டி ஊக்கம் குடுத்திச்சாம்.

ஒழுங்கா இருந்த புலிக்கு கொஞ்ச நாள் கழிச்சி திமிர் பிடிச்சதாம். தாந்தான் பெரிய ஆள், எல்லாரும் அதுக்கு அடங்கி இருக்கணும்னு நினைச்சதாம். அது கூட சமமா இருந்தவங்களை எல்லாம் அடிச்சி சாப்பிட்டுச்சாம். ஏண்டா இப்படி பண்றன்னு கேட்டவங்களையும் அடிச்சி கொன்னுதாம். பக்கத்து காட்டுக்கு எல்லாம் போய், ஏண்டா என் காட்டுக்குள்ள வர்றன்னு அங்கே இருந்தவங்களையும் கொன்னிடிச்சாம். இவ்வளவு நாள் கூட இருந்த பலரும் பிரிஞ்சி போக ஆரம்பிச்சாங்களாம்.

பலம் இருந்த திமிருல பலரையும் கொல்ல கொல்ல, சாமி சொன்னா மாதிரி புலியோட பலம் குறைஞ்சி கிட்ட வந்ததாம். அப்போ காட்டுல இருந்த மத்த மிருகங்கள் இதை அடிக்க ஆரம்பிச்சதாம். வலிக்குதுன்னு பக்கத்துல இருந்த எந்த காட்டுக்கு போனாலும் இதை துரத்தி விட்டாங்களாம். கூட இருந்தவங்க எல்லாம் பத்திரமா ரொம்ப தூரம் போய் தங்கிட்டு இந்த புலியை பார்த்து
பயப்படாதே நீ சண்டை போடு. அது உன் காடு. உன் சொத்துன்னு தூண்டி விட்டு சாப்பாடு அனுப்பி அந்த புலிக்கு தைரியம் குடுத்துச்சாம். புலியும் விடாம சண்டைக்கு போய் அங்கங்கே அடி வாங்கிச்சாம்... அப்புறம்.. மீதி கதை அப்புறம்.


பின் குறிப்பு : இது ஒரு கற்பனை கதை. இலங்கையில் சுதந்திரத்துக்காக போராடும் புலிகளுக்கும், புலம் பெயர்ந்து போராடும் அல்லது வாழும் சகோதரர்(ரி)களுக்கும், இதுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.