Saturday, September 09, 2006

ஒரு காட்டுல ஒரு நரி

ஒரு காட்டுல ஒரு நரி இருந்திச்சாம்.

அந்த காட்டுல இருந்த மத்த மிருகம் எல்லாம் இதை மதிக்காம புறக்கணிச்சி, திட்டி அடிச்சி கொடுமை பண்ணிச்சாம். பொறுத்து பொறுத்து பார்த்த நரி ஒரு நாள் வெறி பிடிச்சி கடவுளை நோக்கி தவம் பண்ணிச்சாம். கடவுளும் நரி முன்னாடி தோன்றி என்ன வரம் வேணும்னு கேட்டுச்சாம். நரி சொல்லிச்சாம்,

நான் ரொம்ப சின்னவனா இருக்கேன், யாரையும் என்னால பணிய வைக்க முடியல, பலம் குடு, ஆயுதம் குடு, எல்லாரையும் எதிர்க்க துணிவு குடுன்னு.

சாமி சொல்லிச்சாம்
நான் இந்த வரம் தர்றேன். ஆனா ஒண்ணு, உன் பலத்தோட இருக்கிறவன் கிட்ட மோதணும், உன்னைவிட பலம் குறைஞ்சவன்கிட்ட மோதுனா உன் பலம் குறைஞ்சி கிட்ட வரும், கடைசியில நீ இப்ப இருக்குற மாதிரி ஆயிடுவேன்னு சொன்னாராம்.

நரியும் சரின்னு சொல்லிட்டு வரத்தை வாங்கிட்டு சாமிகிட்ட நன்றி சொல்லிட்டு ஒரு கண்ணாடி முன்னாடி நின்னு பார்த்துச்சாம். அங்கே நரி தெரியலியாம், சர்வ வல்லமை படைத்த புலி மாதிரி தெரிஞ்ச்சிசாம். காட்டுல பகட்டா திமிரோட திரிஞ்ச பல மிருகத்துக்கு இந்த நரி-புலியை பார்த்து பயம் வந்து மரியாதை குடுக்க ஆரம்பிச்சதாம். பக்கத்து காட்டுல இருந்த பல நரிகளும் இந்த புலிக்கு பாராட்டி ஊக்கம் குடுத்திச்சாம்.

ஒழுங்கா இருந்த புலிக்கு கொஞ்ச நாள் கழிச்சி திமிர் பிடிச்சதாம். தாந்தான் பெரிய ஆள், எல்லாரும் அதுக்கு அடங்கி இருக்கணும்னு நினைச்சதாம். அது கூட சமமா இருந்தவங்களை எல்லாம் அடிச்சி சாப்பிட்டுச்சாம். ஏண்டா இப்படி பண்றன்னு கேட்டவங்களையும் அடிச்சி கொன்னுதாம். பக்கத்து காட்டுக்கு எல்லாம் போய், ஏண்டா என் காட்டுக்குள்ள வர்றன்னு அங்கே இருந்தவங்களையும் கொன்னிடிச்சாம். இவ்வளவு நாள் கூட இருந்த பலரும் பிரிஞ்சி போக ஆரம்பிச்சாங்களாம்.

பலம் இருந்த திமிருல பலரையும் கொல்ல கொல்ல, சாமி சொன்னா மாதிரி புலியோட பலம் குறைஞ்சி கிட்ட வந்ததாம். அப்போ காட்டுல இருந்த மத்த மிருகங்கள் இதை அடிக்க ஆரம்பிச்சதாம். வலிக்குதுன்னு பக்கத்துல இருந்த எந்த காட்டுக்கு போனாலும் இதை துரத்தி விட்டாங்களாம். கூட இருந்தவங்க எல்லாம் பத்திரமா ரொம்ப தூரம் போய் தங்கிட்டு இந்த புலியை பார்த்து
பயப்படாதே நீ சண்டை போடு. அது உன் காடு. உன் சொத்துன்னு தூண்டி விட்டு சாப்பாடு அனுப்பி அந்த புலிக்கு தைரியம் குடுத்துச்சாம். புலியும் விடாம சண்டைக்கு போய் அங்கங்கே அடி வாங்கிச்சாம்... அப்புறம்.. மீதி கதை அப்புறம்.


பின் குறிப்பு : இது ஒரு கற்பனை கதை. இலங்கையில் சுதந்திரத்துக்காக போராடும் புலிகளுக்கும், புலம் பெயர்ந்து போராடும் அல்லது வாழும் சகோதரர்(ரி)களுக்கும், இதுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.

1 comment:

  1. டேய் நாயே, பொத்திகிட்டு உன் வேலையை பாரு. வந்துட்டான் கதை சொல்ல.

    ReplyDelete