Sunday, September 10, 2006

பகுத்தறிவு என்றால் என்ன?

பகுத்தறிவு என்றால் என்ன?
என்ன ஏது என்று புரியாவிட்டால், அதை எதிர்த்து போராடுவது
அழுக்கு தெரியாமல் இருக்க கறுப்பு சட்டை அணிவது
தெரு முனைகளில் கூட்டம் போட்டு அசிங்கமாக பேசுவது
பிடிக்காதவர்களை நடுதெருவில் வைத்து செருப்பு விளக்கமாறு காட்டுவது
கடவுள் இல்லை என்று சாமி சிலைக்கு செருப்பு மாலை போடுவது
அதே சாமி சிலைக்கு பூஜை செய்ய உரிமை கேட்பது
பறவைகளின் கக்கூஸை பகுத்தறிவு சிலை என்பது
வருடம் ஒருமுறை அந்த கக்கூஸுக்கு மாலை போடுவது
அந்த கக்கூஸை வணங்குவது
இவர்கள் மட்டுமே அதை கழுவ உரிமை வேண்டுவது
பூணூல் போட்டவர்களை திட்டி தீர்ப்பது
சண்டைக்கு வராதவர்களிடம் வெட்டி வீரத்தை காட்டுவது
குல்லா போட்டவர்களுக்கு சலாம் போடுவது
வசை வார்த்தைகளை கொண்டு புத்தகம் எழுதுவது
கோவணத்தில் கடவுள் இருக்கிறாரா என்று தேடுவது
ஈழத்தை பற்றி இந்தியாவில் பேசுவது
கறுப்பு வெள்ளையில் போஸ்டர் அடிப்பது
கோயில் கருவறைக்குள் நுழைந்துவிட்டு வெற்றி என்பது
அடிக்கடி தீக்குளித்து உயிருடன் இருப்பது
நிற்க்கும் ரயிலின் முன் பாய்ந்து வீரம் காட்டுவது
தமிழ்நாட்டு கற்பை காப்பாற்றுவது
கற்பை காப்பாற்ற வேட்டியை தூக்குவது
தூக்கிய வேட்டியுடன் போய் சினிமா நடிகையை மிரட்டுவது
பகுத்தறிவுள்ள மெகா சீரியலுக்கு விளக்கு பிடிப்பது
கற்பை போற்றி பாதுகாக்கும் டிவிக்கு குடை பிடிப்பது
ரோடு போடும் தாரை சுவற்றில் அடிப்பது
இவர்களின் பேச்சை கேட்பவர்களையும் வெங்காயமென்பது
மொத்தத்தில் பெரியாரின் பேரை கெடுத்து அவர் மீதான் மதிப்பை உடைத்து குட்டிசுவராக்குவது - பகுத்தறிவு

சாமி இல்லைன்னு சொல்லுறியா. சரி இல்லைன்னு வச்சிக்கோ. எதுக்கு செருப்பு மாலை போட்டு உன் கீழ்தர புத்தியை காட்டுற. மனசு எப்படியோ அது தான் வெளியவும் வரும். காசு மாலை போடுறவன் பணக்காரன். பூமாலை போடுறவன் மரியாதையானவன். செருப்பு மாலை போடுறவன் செருப்புக்கு சமானம் தான்.

வேதம் புராணம் எல்லாம் பொய். எல்லாம் கதை. இருந்துட்டு போகுது. நீ படிக்காதே. உனக்கு புரியாட்டி அதை போட்டு ஏன் எரிக்கிறே? அடுத்தவனுக்கு புரியுதேன்னு உனக்கு ஏன் வயிறு எரியுது? வேதம் படிச்சவன் அவன் வேலையை பார்த்துட்டி போனா, நீ ஏன் அவன் பின்னாடி வேட்டியை தூக்கிட்டு போற? உனக்கு வேலை இல்லையா?

பார்ப்பான் சண்டைக்கு வர மாட்டான்னு நல்லா தெரிஞ்சி அவங்களை மட்டும் எதிர்க்கிறது. கவுண்டர், தேவர் கிட்ட போய் இப்படி பேசிப்பாரு.. வகுந்துடுவாங்க. முஸ்லீம் பத்தி பேசிப்பாரு. நடக்குறது தெரியும்.

சிலையை கழுவி சந்தனம் பூசினா தப்பா?. தப்பு தான். பகுத்தறிவோட செருப்பு மாலை போட்டு சாணியை பூசி இருந்தா மனுஷ குணம்னு சொல்லி இருப்பாங்க. பாவம் மரியாதை செய்ய தெரியாம சந்தனம் பூசிட்டாங்க.

சினிமாகாரி வாயிலதான் தமிழ் பெண்கள் கற்பு இருக்கா? யாரோ ஏதோ சொல்லிட்டாங்களாம், இவங்க போய்ட்டாங்க வேட்டியை தூக்கிகிட்டு. நல்ல பொழப்புடா உங்களோடது.

உங்களை மாதிரி சீடரை எல்லாம் திருத்த பெரியார் திரும்பி பொறக்கணும். அதுக்கு நான் கடவுளை கும்பிட்டுக்குறேன்.

Saturday, September 09, 2006

ஒரு காட்டுல ஒரு நரி

ஒரு காட்டுல ஒரு நரி இருந்திச்சாம்.

அந்த காட்டுல இருந்த மத்த மிருகம் எல்லாம் இதை மதிக்காம புறக்கணிச்சி, திட்டி அடிச்சி கொடுமை பண்ணிச்சாம். பொறுத்து பொறுத்து பார்த்த நரி ஒரு நாள் வெறி பிடிச்சி கடவுளை நோக்கி தவம் பண்ணிச்சாம். கடவுளும் நரி முன்னாடி தோன்றி என்ன வரம் வேணும்னு கேட்டுச்சாம். நரி சொல்லிச்சாம்,

நான் ரொம்ப சின்னவனா இருக்கேன், யாரையும் என்னால பணிய வைக்க முடியல, பலம் குடு, ஆயுதம் குடு, எல்லாரையும் எதிர்க்க துணிவு குடுன்னு.

சாமி சொல்லிச்சாம்
நான் இந்த வரம் தர்றேன். ஆனா ஒண்ணு, உன் பலத்தோட இருக்கிறவன் கிட்ட மோதணும், உன்னைவிட பலம் குறைஞ்சவன்கிட்ட மோதுனா உன் பலம் குறைஞ்சி கிட்ட வரும், கடைசியில நீ இப்ப இருக்குற மாதிரி ஆயிடுவேன்னு சொன்னாராம்.

நரியும் சரின்னு சொல்லிட்டு வரத்தை வாங்கிட்டு சாமிகிட்ட நன்றி சொல்லிட்டு ஒரு கண்ணாடி முன்னாடி நின்னு பார்த்துச்சாம். அங்கே நரி தெரியலியாம், சர்வ வல்லமை படைத்த புலி மாதிரி தெரிஞ்ச்சிசாம். காட்டுல பகட்டா திமிரோட திரிஞ்ச பல மிருகத்துக்கு இந்த நரி-புலியை பார்த்து பயம் வந்து மரியாதை குடுக்க ஆரம்பிச்சதாம். பக்கத்து காட்டுல இருந்த பல நரிகளும் இந்த புலிக்கு பாராட்டி ஊக்கம் குடுத்திச்சாம்.

ஒழுங்கா இருந்த புலிக்கு கொஞ்ச நாள் கழிச்சி திமிர் பிடிச்சதாம். தாந்தான் பெரிய ஆள், எல்லாரும் அதுக்கு அடங்கி இருக்கணும்னு நினைச்சதாம். அது கூட சமமா இருந்தவங்களை எல்லாம் அடிச்சி சாப்பிட்டுச்சாம். ஏண்டா இப்படி பண்றன்னு கேட்டவங்களையும் அடிச்சி கொன்னுதாம். பக்கத்து காட்டுக்கு எல்லாம் போய், ஏண்டா என் காட்டுக்குள்ள வர்றன்னு அங்கே இருந்தவங்களையும் கொன்னிடிச்சாம். இவ்வளவு நாள் கூட இருந்த பலரும் பிரிஞ்சி போக ஆரம்பிச்சாங்களாம்.

பலம் இருந்த திமிருல பலரையும் கொல்ல கொல்ல, சாமி சொன்னா மாதிரி புலியோட பலம் குறைஞ்சி கிட்ட வந்ததாம். அப்போ காட்டுல இருந்த மத்த மிருகங்கள் இதை அடிக்க ஆரம்பிச்சதாம். வலிக்குதுன்னு பக்கத்துல இருந்த எந்த காட்டுக்கு போனாலும் இதை துரத்தி விட்டாங்களாம். கூட இருந்தவங்க எல்லாம் பத்திரமா ரொம்ப தூரம் போய் தங்கிட்டு இந்த புலியை பார்த்து
பயப்படாதே நீ சண்டை போடு. அது உன் காடு. உன் சொத்துன்னு தூண்டி விட்டு சாப்பாடு அனுப்பி அந்த புலிக்கு தைரியம் குடுத்துச்சாம். புலியும் விடாம சண்டைக்கு போய் அங்கங்கே அடி வாங்கிச்சாம்... அப்புறம்.. மீதி கதை அப்புறம்.


பின் குறிப்பு : இது ஒரு கற்பனை கதை. இலங்கையில் சுதந்திரத்துக்காக போராடும் புலிகளுக்கும், புலம் பெயர்ந்து போராடும் அல்லது வாழும் சகோதரர்(ரி)களுக்கும், இதுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.