Monday, August 22, 2011

லஞ்சம் ஒழிக - 1


ஜன் லோக்பால் ஊழலை விசாரிக்க போகிறது. ஏன் அதை தடுக்க நாம் முயற்சிக்க கூடது?

ஊழல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது? - நம் அவசரத்தில்.

நிதானமாக யோசிப்போம்.
1) அரசு துறையில் நமக்கு ஒரு காரியம் நடக்கணும். ஒழுக்கமாய் தேவையான ஆவணங்களை கொடுத்தாயிற்று. ஆனால் பிரச்சினையே அது எப்போது நடக்கும்/முடிக்கப்படும் என்று நமக்கு தெரியாது. இங்கு தான் நம் குறுக்கு புத்தி / லஞ்ச புத்தி தலை தூக்கி பார்க்கிறது. இதைத் தான் அரசு அதிகாரிகளும் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள். நம் தலையை கொய்கிறார்கள்.

என்ன செய்யலாம்?
ஒவ்வொரு வேலைக்கும் இத்தனை நாட்கள் ஆகும் என்று வரைமுறை செய்ய வேண்டும். கால தாமதம் ஆகும் என்றால் முறையான காரணம் தர வேண்டும் என நிர்பந்திக்கலாம். தட்கல் முறையையும் வைத்து அவசர தேவைகளுக்கு முறையான கட்டணத்துடன் சேவை அளிக்கலாம். இது லஞ்ச வேரை மேலும் வளர விடாமல் தடுக்கும்.

சொல்லுவது சுலபமாக இருந்தாலும், இதை செயல் படுத்த சில காலம் ஆகலாம். அரசு துறை வேலைகளை முறைப் படுத்த வேண்டும். தேவையான ஆட்களை நியமித்து பயிற்றுவிக்க வேண்டும். அனைவரையும் கண்காணிக்கும் அமைப்பையும் கொண்டு வர வேண்டும். மக்களிடம் அவர்களின் எதிர்பார்ப்பை பதிவு செய்து, தேவையான, முன்னேற்றத்துக்கு அவசியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

யார் செய்ய வேண்டும்?
முதலில் மாவட்ட ஆட்சியாளரிடம் இருந்து தொடங்கலாம். நிறைய படித்த, ஊக்கம் நிறைந்த, வேகமும், விவேகமும் கொண்ட இந்த இளம் தலைமுறை (மாவட்ட) ஆட்சியாளர்கள் இந்த மாற்றத்தை தொடங்கலாம்.

யார் உதவுவது?
எந்த புது முயற்சிக்கும் அரசு பணம் தரப்போவது இல்லை. எனவே ஆரம்பகட்ட வேலைகளில் தன்னார்வ குழுக்களின் உதவியை ஏற்றுக்கொள்ளலாம். கல்லூரி மாணவர்கள் பகுதி நேரம் இதில் செலவிடலாம். ஒரு தெளிவான நிலைக்கு வந்ததும், அரசிடம் சமர்பித்து அதற்கான நிதியை கேட்கலாம். நிச்சயமாக ஒரு மாவட்ட ஆட்சியாளரால் இந்த மாற்றங்களை ஆரம்பிக்க முடியும்.

2) போக்குவரத்து விதிமீறல்கள்
நம்மில் எத்தனையோ பேர் எத்தனையோ முறை பல தவறுகள் செய்து சாலை காவலர்களிடம் மாட்டி இருக்கிறோம். உடனடி நிவாரணம் - கையூட்டு எனப்படும் லஞ்சம். நாமும் தருவோம், அவர்களும் வாங்குவார்கள். யாருக்கும் வெட்கம் இல்லை.

என்ன செய்யலாம்?

No comments:

Post a Comment