Wednesday, August 30, 2006

பஞ்ச் தந்திர கதை

நம்ம விஜய டி ராஜேந்தர் பஞ்ச தந்திர கதை சொல்றார்.

டேய் ஒரு ஊர்ல இருந்திச்சிடா காக்கா
அது பாட்டி சுட்ட வடையை சுட்டுச்சுடா நேக்கா
உட்கார்ந்ததுடா மரத்துல ஷோக்கா
அப்ப அங்க நரி வந்துச்சுடா ஃப்ளூக்கா

நரி காக்காயை பார்த்து கேட்டுச்சாம்
"காக்கா காக்கா கறுப்பு காக்கா
உன் வடையை கொஞ்சம் தா காக்கா"ன்னு

அதுக்கு காக்கா சொல்லிச்சாம்
"மாமா மாமா நரி மாமா
என் முதுகை கொஞ்சம் சொறி மாமா"ன்னு

அதுக்கு கோவப்பட்ட நரி சொல்லிச்சாம்
"சாம்பார்ல போடுறது பெருங்காயம்
உன் வடையே வேண்டாம்டா வெங்காயம்"ன்னு

இதையே விஜயகாந்த் சொன்னா
டேய்ய்ய்ய், வயசான காலத்துல காஷ்மீர் பார்டர் ஓரமா வடை சுட்ட பாட்டி கிட்ட இருந்து ஒரு பாகிஸ்தான் காக்கா வடையை திருடிச்சி. அமெரிக்கா கிட்ட அடி வாங்கின ஒரு ஆப்கானிஸ்தான் நரி அந்த காக்கா கிட்ட பாடு'ன்னு சொல்லிச்சி. பைத்தியகார காக்கா வாயை தொறந்து பாடி வடையை விட்டுடிச்சி. கீழ விழுந்த வடை நரி தலைல விழுந்து நரி அங்கேயே செத்து போச்சி. வடையை பிடிச்சி இருந்த காக்கா பாடி முடிச்சதும் அதுவும் செத்து போச்சி. ஏன் தெரியுமா? அது இந்திய வடை. இந்தியனை தவிர எவன் அதை தொட்டாலும் அவனுக்கு சாவு தாண்டா.

ஜெய் ஹிந்த்!!

Friday, August 25, 2006

15 வயசுலே கல்யாணம்

ஆம்பளை பசங்களுக்கு 15 வயசுல கல்யாணம் பண்ணி வச்சா என்ன நன்மை?

- பத்தாம் வகுப்பு ஒழுங்கா பாஸ் பண்ணுவாங்க.
- பன்னிரெண்டாம் வகுப்பு ஒழுங்கா பாஸ் பண்ணுவாங்க
- சைட் அடிக்கிறது குறையும்
- காதல் கவிதை எழுதுறது குறையும்
- காலேஜ் போகும் போது பஸ்ல தொங்க மாட்டாங்க
- பைக்கை வேகமா ஓட்டி போக மாட்டாங்க
- நைட் வெளியே சுத்த மாட்டாங்க
- குறிஞ்சி, முல்லை மாதிரி புத்தக வியாபாரம் குறையும்
- லவ் மேரேஜ் குறையும்
- பொறுப்பு கொஞ்சம் சீக்கிரமாவே வரும்
- மாமியார் மருமகள் சண்டை குறையும். காரணம் மருமக சின்ன பொண்ணு தானே, மாமியார் நல்லா மிரட்டி வச்சிடுவாங்க :-)

ஆம்பளை பசங்களுக்கு 15 வயசுல கல்யாணம் பண்ணி வச்சா என்ன தீமை?

- பையனோட அப்பா, மருமகளுக்கும் சேர்த்து சம்பாதிக்கணும்
- பையன் வேகமா இருந்துட்டா, பேரனுக்கும் சேர்த்து பையனோட அப்பா தான் சம்பாதிக்கணும்.
- பொண்ணுங்க காலேஜ் போகும் போதோ இல்ல +2 படிக்கும் போதோ 3 மாசம் லீவ் எடுக்க வேண்டி வரும். படிப்பு கெட்டுப் போகும்.
- ஆண் சர்வாதிகாரம் அதிகரிக்கும்
- மக்கள் தொகை பெருகும்
- பீர் வியாபாரம் குறையும்.(இது நன்மையா? தீமையா?)
- மாமியார் மாமனார் கொடுமை அதிகரிக்கும்
- வீட்டோட மாப்பிள்ளையா இருக்குற பசங்களுக்கு படிப்பு பிரஷர் அதிகரிக்கும். (ஃபெயிலானா மாமனாரும், மாமியாரும் குத்தி காட்டுவாங்க)
- முக்கியமான தீமை ஒண்ணு - 35 வயசுல எல்லாரும் தாத்தா ஆய்டுவாங்க :-(

எங்கப்பாரு கிட்ட யாரும் இந்த பதிவை பத்தி சொல்லிடாதீங்க... அப்புறம் அடடாவுக்கு... ச்சீ சொல்ல வெக்கமா இருக்கு.. இருந்தாலும் சொல்லுறேன், பிஞ்சுல பழுத்துட்டியான்னு பெல்ட் பிஞ்சு போற வரை அடிப்பாரு.

Tuesday, August 22, 2006

அடடா - மச்சி

ஒரு வயசு பையனுக்கு அட்வைஸ் பண்ற கவிதை(?).
அட்வைஸ் 1:சைட் அடிக்க போறவனுக்கு
சும்மா நச்சுன்னு இருக்குற மாலை
சில்லுன்னு காத்தடிக்கும் கடற்கரை சாலை
வானவில்லாய் மாணவிகள் நடக்கும் வேளை
மச்சி-போடுடா முடிஞ்ச வரை கடலை.

வயசு உனக்கு இருக்கு
மீசை இருந்தா அதை கொஞ்சம் முறுக்கு
உன் திமிரை மொத்தமா நொறுக்கு
மச்சி-அவ இதயத்துல போடு சுறுக்கு

அட்வைஸ் 2:கண்ணு மண்ணு தெரியாம பைக் ஓட்றவனுக்கு.
வேகமா போகும் தண்ணி லாரி
நெருங்கி போகாதே அது மண்ணு லாரி
பேச்சை கேளுடா பிரம்மச்சாரி
மச்சி-மீறி நீயும் ஆகாதே நாதாரி

அட்வைஸ் 3:காதலியை காக்க வைக்கிறவனுக்கு
நேரத்துக்கு போடா மச்சி
எல்லாப்பொண்ணும் ஒரு ஐஸ் குச்சி
உருகிடும்டா அது நேரம் கழிச்சி
பொண்ணுக்கு பிடிக்கும் பட்டு சாரி
மச்சி-காதலிகிட்ட சொல்லாத ஐயம் ஸாரி.

அட்வைஸ் 4:பொண்ணோட அருமை பற்றி
நெஞ்சை கிழிச்சவர் அனுமான்
என்னைக்கும் நீதான் பயில்வான்
தூது போகாது அந்த நீலவான்
மச்சி-எப்பவும் பொண்ணு ஒரு புள்ளிமான்

அட்வைஸ் தொடரும்..

Sunday, August 20, 2006

யோசிக்கிறேன்

அடடா!!

யார் இவன்.. புதிதாய்???

இவன் பெயர் : சுருக்கமாய் பரத்.

வயது : என்றும் 18

ஏன் இந்த பதிவு?
இவன் சொந்த கருத்துக்களை போட்டு வைக்கத்தான்.

என்ன எழுத போகிறான்?
இந்த பால் வெளி மண்டலத்தில் இருக்கும் எல்லாவற்றையும் பற்றித்தான்.

யார் வலைபதிவை அறிமுகம் செய்தது?
முதலில் கூகிள். அப்புறம் தமிழ்மணம்.

பிடித்தது?
வாக்குவாதம்.

பிடிக்காதது?
விதண்டாவாதம்

அடடா முதலில் எதைப் பற்றி எழுதுவது???

யோசிக்கிறேன்...

அடடா!

அடடா!
எனக்கும் தமிழ் டைப் பண்ண வருதே?
அடடா!!
எனக்கும் தமிழ் டைப் பண்ண வருதே??
அடடா!!!
எனக்கும் தமிழ் டைப் பண்ண வருதே???

இப்படிக்கு
அடடா!